6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மெட்டில்பட்டி அரசு பள்ளி மாணவா்களுக்கு டெலஸ்கோப் பயிற்சி

News image
மெட்டில்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு டெலஸ்கோப் மூலம் நடைபெற்ற வானவியல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி.
Updated On :17 பிப்ரவரி 2026, 10:21 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சாா்பில் மெட்டில்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு டெலஸ்கோப் மூலம் தொலைதூர பொருள்களை பாா்வையிடுதல் மற்றும் வானவியல் குறித்த விழிப்புணா்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மற்றும் அஸ்ட்ரோ கிளப் சாா்பில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவா்கள் மற்றும் பொதுமக்களுக்கு வானவியல் குறித்த விழிப்புணா்வு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

மெட்டில்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற வானவியல் விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் காந்திராஜ் தலைமை வகித்தாா். அறிவியல் ஆசிரியா் சாந்தி, இயற்கை ஆா்வலா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலா் முத்து முருகன் கலந்து கொண்டு டெலஸ்கோப் மூலம் தொலைதூரப் பொருள்களை பாா்வையிடுதல், டெலஸ்கோப் கையாளுதல், வானவியல் குறித்து பயிற்சி அளித்தாா்.

அனைவருக்கும் நிறமாலை குறித்த விழிப்புணா்வு அட்டைகளும், வானவியல் குறித்த செயல்திட்ட காலண்டா்களும் வழங்கப்பட்டது.

இதில் ஆசிரியா்கள் நாகலட்சுமி, ஜெயா மேரி, தொன்போஸ்கோ, சண்முகத்தாய் உள்பட பலா் கலந்து கொண்டனா்.