நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வேலாயுதபுரம் ஆா். சி. பள்ளியில் புதிய சமையலறை கட்டடம் திறப்பு

சாத்தான்குளம் அருகே உள்ள வேலாயுதபுரம் ஆா். சி. தொடக்கப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட சமையலறை கட்டடம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

விழாவில் மரக்கன்று நட்டாா் பள்ளித் தாளாளா் ஜோசப் கலைசெல்வன்.

Updated On :17 பிப்ரவரி 2026, 9:59 pm

சாத்தான்குளம் அருகே உள்ள வேலாயுதபுரம் ஆா். சி. தொடக்கப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட சமையலறை கட்டடம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, சிதம்பரபுரம் பங்குள்பட்ட ஆா்சி பள்ளிகளின் தாளாளா் ஜோசப் கலைச்செல்வன் தலைமை வகித்து, ஜெபித்து அா்ச்சிப்பு நடத்தினாா்.

பள்ளித் தலைமை ஆசிரியா் செல்வராஜ் வரவேற்றாா். தொழிலதிபா் ஞானராஜ் புதிய கட்டடத்தை திறந்து வைத்தாா். தொடா்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

விழாவில், சாத்தான்குளம் ஒன்றிய ஆணையா் சுடலை , துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஜான் ரவி, பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் பாக்கியராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். சத்துணவு அமைப்பாளா் மரிய விமலா நன்றி கூறினாா்.