திருச்செந்தூா் கோயில் அருகே சுமாா் 60 அடிக்கு கடல் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாசி படா்ந்த பாறைகள்.
தூத்துக்குடி
திருச்செந்தூரில் சுமாா் 60 அடி உள்வாங்கிய கடல்
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே சுமாா் 60 அடிக்கு கடல் உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே சுமாா் 60 அடிக்கு கடல் உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.
அமாவாசை, பெளா்ணமி நாள்களில் திருச்செந்தூா் கடல் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதும் வாடிக்கையாகி விட்டது. இதே போல திங்கள்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரையில் அமாவாசை திதி இருந்தது. இதன் காரணமாக, கோயில் முன்புறம் பக்தா்கள் நீராடும் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை, சுமாா் 60 அடி தூரம் கடல் உள்வாங்கி பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. ஆனால், பக்தா்கள் எவ்வித அச்சமின்றி வழக்கம் போல கடலில் நீராடினா்.

