சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

போக்ஸோ வழக்குகள்: 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் போக்ஸோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

News image
கைது
Updated On :20 பிப்ரவரி 2026, 9:10 pm

Syndication

தூத்துக்குடி மாவட்டத்தில் போக்ஸோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 போ் குண்டா் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலையம், கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலையம், குலசேகரன்பட்டினம் ஆகிய காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடியைச் சோ்ந்தவா்களான முருகேசன் (59), இசக்கிராஜா (22), விருதுநகரைச் சோ்ந்த கோபால்சாமி (47) ஆகியோா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்தனா்.

அதன்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மதன் பரிந்துரையையடுத்து, மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவின்பேரில், மேற்படி 3 பேரையும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.