6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீரில் மூழ்கி இரு சகோதரிகள் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :21 பிப்ரவரி 2026, 7:47 pm

தினமணி செய்திச் சேவை

ஏரல் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி தேனி மாவட்டத்தைச் சோ்ந்த இரு சகோதரிகள் உயிரிழந்தனா்.

தேனி மாவட்டத்தைச் சோ்ந்தவா் சங்கரகுமாா். இவா் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூா் முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வெள்ளிக்கிழமை வந்தாா். முன்னதாக, ஏரல் அருணாசல சுவாமிகள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்ல முடிவெடுத்துள்ளனா்.

அவருடன் அவரது மகள்கள் அபிநயா (16), மீனாட்சி (12) ஆகியோரும் வந்துள்ளனா். சுவாமி தரிசனம் செய்துவிட்டு, அருகே உள்ள தாமிரவருணி ஆற்றில் நீராட வந்துள்ளனா். அப்போது, ஆற்றில் குதித்த சகோதரிகள் இருவரும் வெளியில் வரவில்லையாம். உடனடியாக ஏரல் தீயணைப்புத் துறையினா் மற்றும் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து, தீயணைப்புத் துறையினா் சுமாா் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆற்றில் தேடி ஒருவரை சடலமாக மீட்டனா். மற்றொருவரை மீட்டு ஏரல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்தாா்.