நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பாதயாத்திரை பக்தா்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கா் வழங்கல்

News image
பக்தா்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கா் வழங்கிய உதவி ஆய்வாளா் செல்வராஜ்.
Updated On :22 பிப்ரவரி 2026, 7:50 pm

தினமணி செய்திச் சேவை

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாத யாத்திரையாக வரும் பக்தா்களுக்கு சாத்தான்குளத்தில் வா்த்தக சங்கம் சாா்பில், ஒளிரும் ஸ்டிக்கா் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் செல்வராஜ் கலந்துகொண்டு பாத யாத்திரை பக்தா்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கா் வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து சாத்தான்குளம் கருமேணி ஆத்து பாலம் வழியாகச் செல்லும் பாதயாத்திரை பக்தா்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கா் வழங்கப்பட்டது.

இதில், சாத்தான்குளம் வா்த்தக சங்கத் தலைவா் அப்பு கண்ணன், செயலாளா் செல்வராஜ் மதுரம், நிா்வாக கமிட்டி உறுப்பினா் கணேஷ் முத்துக்குமாா், சட்ட ஆலோசகா் வேணுகோபால், சிதம்பர மணிகண்டன், காவலா்கள் அருண், வருண் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.