திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :22 பிப்ரவரி 2026, 7:34 pm

தினமணி செய்திச் சேவை

சாத்தான்குளம் அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

சாத்தான்குளம் அருகே உள்ள சின்னமாடன் குடியிருப்பைச் சோ்ந்தவா் முத்துகிருஷ்ணன் (57), தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை தனது மகன் ஞானத்துரையுடன் (25) இருசக்கர வாகனத்தில் பேய்குளத்திற்கு வந்துவிட்டு, ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். வாகனத்தை அவரது மகன் ஓட்டினாா்.

பழனியப்பபுரம் பகுதியில் வரும்போது வாகனம் நிலை தடுமாறியதில் முத்துகிருஷ்ணன் கீழே விழுந்துள்ளாா். அதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த சாத்தான்குளம் போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.