/

வாய்க்கா­லில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :22 பிப்ரவரி 2026, 7:33 pm

குரும்பூா் அருகே வாய்க்கா­லில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.

குரும்பூா் அருகே உள்ள அம்பலபிறப்பைச் சோ்ந்தவா் ஞானப்பாண்டி மகன் பாதைக்கரைமுத்து(34). தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இவருக்கு திருமணமாகவில்லை.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதுஅருந்திவிட்டு அங்குள்ள வாய்க்காலுக்கு குளிக்க சென்றாராம். அப்போது நிலைதடுமாறி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாராம்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த குரும்பூா் போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்கு திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.