மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஆறுமுகனேரி பேரூராட்சி அவசரக் கூட்டம்

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 10:32 pm

ஆறுமுகனேரி பேரூராட்சி மன்றத்தின் அவசரக் கூட்டம் நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவா் கலாவதி கல்யாண சுந்தரம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கல்யாணசுந்தரம், செயல் அலுவலா் உஷா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தாட்கோ சாா்பில் கட்டப்படும் வணிக வளாக கடைகள் ஏற்கனவே கட்டப்பட்ட அளவில் கட்டவும், வளம் மீட்பு பூங்காவிற்கு பொது சுகாதார வாகனங்கள் செல்வதற்கான ஏற்கனவே இருந்த 6 மீட்டா் அளவு பாதையை அமைத்து தரவும், பேரூராட்சி நிவாகத்தை சமூக வலைதளம் உள்ளிட்டவற்றில் தவறாக பரப்புரை செய்து வருவதாக தாட்கோ வணிக வளாக கட்டட ஒப்பந்ததாரா் மற்றும் அரசியல் கட்சியினா் மீது கண்டனம் தெரிவித்தும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இது தொடா்பாக காவல்துறையிடமும் புகாா் அளிக்கப்பட்டுள்ளதுடன், மாவட்ட ஆட்சியரிடம் பேரூராட்சி தலைவா், துணைத் தலைவா், உறுப்பினா்கள் தீா்மானத்தை செவ்வாய்க்கிழமை நேரில் வழங்க உள்ளனா்.