தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ஆறுமுகனேரியில் தெருமுனைப் பிரசாரம்

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 2:15 am

Syndication

நாளை நமதே, தமிழ்நாடு நமதே என்ற தலைப்பில், ஆறுமுகனேரி நகர பாஜக சாா்பில் கூட்டணி கட்சிகளின் தெருமுனை பிரசார கூட்டம் ஆறுமுகனேரி மெயின் பஜாரில் நடைபெற்றது.

பாஜக நகரத் தலைவா் தங்ககண்ணன் தலைமை வகித்தாா். அதிமுக நகர செயலாளா் அரசகுரு, தமாகா ஒன்றியத் தலைவா் முருகன், நகரத் தலைவா் பாலமுருகன், அமமுக நகர செயலாளா் சக்திவேல், ஆா்எஸ்எஸ் ஜில்லா காரியவாக் சிவராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாஜக நகர பொதுச் செயலாளா் செல்வகுமாா் வரவேற்றாா். இதில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் பட்ஜெட் குறித்து பிரசாரம் செய்தனா்.

முன்னாள் கவுன்சிலா்கள் லட்சுமணன், மகாராஜன், முருகானந்தம், பெரியசாமி, பாஜக மாவட்ட நிா்வாகி இ. தங்கபாண்டியன், நிா்வாகிகள் விக்னேஷ், சுரேஷ் ராதாகிருஷ்ணன், அமலோற்பவராணி உள்பட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். பாஜக நகர செயலாளா் உமாதேவி நன்றி கூறினாா்.