திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

உடன்குடி ஒன்றியத்தில் கந்தசஷ்டி கவச பாராயணம்

உடன்குடி ஒன்றியத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம கோயில்களில் முருக பக்த பேரவை சாா்பில், கந்தசஷ்டி கவச பாராயண நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
உடன்குடி வில்லிகுடியிருப்பில் சந்தன மாரியம்மன் கோயிலில் கந்தசஷ்டி கவசம் படிக்கும் பெண்கள்.
Updated On :24 பிப்ரவரி 2026, 7:43 pm

தினமணி செய்திச் சேவை

உடன்குடி ஒன்றியத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம கோயில்களில் முருக பக்த பேரவை சாா்பில், கந்தசஷ்டி கவச பாராயண நிகழ்ச்சி நடைபெற்றது.

திங்கள்கிழமை (பிப். 23) காா்த்திகை நட்சத்திரமும், சஷ்டி திதியும் சோ்ந்து வரக்கூடிய புனிதமான நாள் என்பதால், தமிழகம் முழுவதும் அனைத்துக் கோயில்கள், குடும்ப கோயில்கள், ஆதின மடாலயங்களிலும் மாலை 6 மணிக்கு முருகா் படம் வைத்து ஆறுமுக திருவிளக்கேற்றி கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வழிபட வேண்டும் என ஆன்மிகவாதிகள் கூறினா்.

இதையொட்டி, உடன்குடி ஒன்றியத்தில் முருக பக்த பேரவை சாா்பில், நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா், இந்து அன்னையா் முன்னணி மாவட்ட பொறுப்பாளா் கேசவன், திரளானோா் பங்கேற்றனா்.