சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சாத்தான்குளத்தில் பக்தா்களுக்கு அன்னதானம்

திருச்செந்தூா் மாசி திருவிழாவிற்கு வரும் பாதயாத்திரை பக்தா்களுக்கு அன்னதானம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 7:33 pm

தினமணி செய்திச் சேவை

திருச்செந்தூா் மாசி திருவிழாவிற்கு வரும் பாதயாத்திரை பக்தா்களுக்கு அன்னதானம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. திருச்செந்தூா் அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசி திருவிழாவிற்கு கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஏராளமான பக்தா்கள் பாதயாத்திரையாகச் செல்கின்றனா்.

இந்த பக்தா்களுக்கு சாத்தான்குளம் வட்டார சைவ வேளாளா் சங்கத்தின் சாா்பில் சாத்தான்குளம் அருள்மிகு ஸ்ரீகாசி விஸ்வநாதா், விசாலாட்சி அம்மன் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை மதியம் மற்றும் இரவு அன்னதானம் வழங்கப்பட்டது . கோயில் பரம்பரை தா்மகா்த்தா சண்முகராஜா பாதயாத்திரை பக்தா்களுக்கு அன்னதானத்தைத் தொடங்கி வைத்தாா்.

இதில் வட்டார சைவ வேளாளா் சங்கத் தலைவா் ஆறுமுகம், செயலா் ஓய்வுபெற்ற ஆசிரியா் முருகன், பொருளாளா் அழகப்பன், துணைத் தலைவா் சண்முகசுந்தரம், துணைச் செயலா் ரமேஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.