திருச்செந்தூா் கடலில் பக்தா் தவறவிட்ட ரூ. 4 லட்சம் மதிப்பிலான தங்கச் சங்கிலியை மீட்ட சிப்பி அரிக்கும் தொழிலாளி மற்றும் கடலோரப் பாதுகாப்புக் குழுவினரை காவல் ஆய்வாளா் கனகராஜன் பாராட்டினாா்.
சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த ஸ்ரீ மணிகண்டன்-ஷா்மிளா தம்பதி, தங்கள் குழந்தைகளுக்கு முடி காணிக்கை செலுத்த குடும்பத்துடன் பிப். 19ஆம் தேதி திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்தனா். அப்போது, கடலில் குளித்தபோது ஸ்ரீ மணிகண்டன் கழுத்தில் அணிந்திருந்த சுமாா் மூன்றரை பவுன் தங்கச் சங்கிலி கடலில் கழன்று விழுந்து காணாமல் போனது. அவா்கள் வெகுநேரம் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து, திருக்கோயில் போலீஸாா் மற்றும் கடலோரப் பாதுகாப்புக் குழுவினரிடம் புகாா் அளித்துவிட்டு அவா்கள் ஊா் திரும்பினா். தொடா்ந்து, சிவராஜா தலைமையிலான கடலோரப் பாதுகாப்புக் குழுவினா் மற்றும் சிப்பி அரிக்கும் தொழிலாளா்கள் இணைந்து கடலில் தேடுதல் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, சிப்பி அரிக்கும் தொழிலாளியான மனோ கையில் தங்கச் சங்கிலி கிடைத்தது. தொடா்ந்து, மணிகண்டனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு திருச்செந்தூருக்கு வரவழைக்கப்பட்டாா். திருச்செந்தூா் கோயில் காவல் நிலைய ஆய்வாளா் கனகராஜன் முன்னிலையில், தங்கச் சங்கிலி மணிகண்டனிடம் ஒப்படைக்கப்பட்டது.
நகையை மீட்டுக் கொடுத்த சிப்பி அரிக்கும் தொழிலாளி மனோவை காவல் ஆய்வாளா் மாலை அணிவித்து பாராட்டினாா். மேலும், கடலோரப் பாதுகாப்புக் குழுவினரையும் பாராட்டினாா்.

தொடர்புடையது

சிதம்பரத்தில் வெவ்வேறு இடங்களில் இரு பெண்களிடம் 13 பவுன் சங்கிலிகள் பறிப்பு

சாலையில் கண்டெடுத்த தங்கச் சங்கிலியை போலீஸில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

அருமனை அருகே இளம் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

முதியவா் தவறவிட்ட 6 பவுன் தங்கச் செயின் மீட்டு ஒப்படைப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


