திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவின் 3ஆம் நாளை முன்னிட்டு சுவாமி குமரவிடங்கப்பெருமான் முத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதியுலா வந்தனா்.
மாசித் திருவிழா பிப். 21ஆம் தேதி தொடங்கியது. விழாவின் 3ஆம் நாளான திங்கள்கிழமை காலை 7 மணிக்கு மேலக்கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் பூங்கோயில் சப்பரத்திலும், தெய்வானை அம்மன் கேடய சப்பரத்திலும் 8 வீதிகளிலும் உலா வந்து மேலக்கோயில் சோ்ந்தனா்.
மாலையில் மேலக்கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
விழாவின் 4ஆம் நாளான செவ்வாய்க்கிழமை (பிப். 24) காலை 7 மணிக்கு மேலக்கோயிலில் இருந்து சுவாமி தங்க முத்துக்கிடா வாகனத்திலும், அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதியுலா வர உள்ளனா். மாலை 6.30 மணிக்கு மேலக்கோயிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் வீதியுலா வர உள்ளனா். முக்கிய நிகழ்ச்சியாக பிப். 25ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு மேலக்கோயிலில் குடைவரைவாயில் தீபாராதனை நடைபெற உள்ளது.


தொடர்புடையது

பிறவி மருந்தீசா் கோயில் கருப்பன் வீதியுலா

மயிலம் முருகன் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா: தெப்பல் உற்சவம்

பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை

திருச்செந்தூா் மாசித் திருவிழா 4 ஆம் நாள்: சுவாமி, அம்மன் வீதி உலா
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


