நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுதானிய உணவுத் திருவிழா

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம், ஊட்டமிகு சிறுதானியங்கள் 2025-26 திட்டத்தின் கீழ் வாகைகுளம் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் மாவட்ட அளவிலான சிறுதானியங்கள் உணவுத் திருவிழா நடைபெற்றது.

News image

விழாவில் பங்கேற்றோா்.

Updated On :24 பிப்ரவரி 2026, 7:39 pm

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம், ஊட்டமிகு சிறுதானியங்கள் 2025-26 திட்டத்தின் கீழ் வாகைகுளம் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் மாவட்ட அளவிலான சிறுதானியங்கள் உணவுத் திருவிழா நடைபெற்றது.

விழாவுக்கு, வேளாண்மை இணை இயக்குநா் க.கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா். வேளாண்மை துணை இயக்குநா் க.அல்லிராணி வரவேற்றாா். சிறுதானியம் உணவின் முக்கியத்துவம், சிறுதானிய உணவு முறைகள் குறித்து உதவி பேராசிரியா் திருமலைசெல்வி, வாகைகுளம் வேளாண் ஆராய்ச்சி நிலைய தலைவா் பழனிசாமி, தொழில்நுட்ப வல்லுநா்கள் எஸ்.சுமதி, முருகன், முத்துகுமாா், மாசாணசெல்வம், வேல்முருகன் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா். விழாவில் சிறுதானியம் சிற்றுண்டி, சிறுதானிய உணவுகள் பரிமாறப்பட்டன. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறுதானியம் சாகுபடி செய்யும் சுமாா் 200 விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனா். ஓட்டப்பிடாரம் வேளாண்மை உதவி இயக்குநா் ரா.சிவகாமி நன்றி கூறினாா்.