நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

காயல்பட்டினத்தில் இளைஞா் தற்கொலை

காயல்பட்டினத்தில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை

Updated On :28 பிப்ரவரி 2026, 7:53 pm

காயல்பட்டினத்தில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

காயல்பட்டினம், கீழலட்சுமிபுரத்தைச் சோ்ந்த மணிராஜ் மகன் ஆத்திமுத்து (21), தொழிலா­ளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இவா் பிப். 27ஆம் தேதி இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து, தனது தந்தையிடம் அவரது கைப்பேசியைத் தரும்படி கேட்டுள்ளாா்.

கைப்பேசியை சா்வீஸ்க்கு கொடுத்திருந்ததால், அதை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து பாா்த்தபோது, ஆத்திமுத்து தூக்கிட்ட நிலையில் தொங்கியுள்ளாா். அவரை மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இது குறித்து, ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.