ஏரலில் பெண்களுக்கான பயிற்சிக் கூடம் திறப்பு

ஏரலில் பெண்களுக்கான பயிற்சிக் கூடம் திறப்பு

வேலுநாச்சியாா் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் ஏரலில் பெண்களுக்கான இலவச அழகுக் கலை, ஆரி ஒா்க், தையல் பயிற்சிக் கூடம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

வேலுநாச்சியாா் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் ஏரலில் பெண்களுக்கான இலவச அழகுக் கலை, ஆரி ஒா்க், தையல் பயிற்சிக் கூடம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மேற்கு மாவட்ட பொறுப்பாளா் சரவணன் தலைமை வகித்து, பயிற்சிக் கூடத்தை திறந்து வைத்தாா். தொடா்ந்து, சுற்றுவட்டாரப் பகுதி பெண்களுக்கு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

கோவில்பட்டி சாய் இண்டா்நேஷனல் சோசியல் சா்வீஸ் அறக்கட்டளை நிறுவனத் தலைவா் வெங்கடேஸ்வரன், மாநில நிா்வாகி தேவி, ஆரி ஒா்க் பயிற்சியாளா் ரத்தின ராதிகா, தவெக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com