சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

குரும்பூா் அருகே முதியவரை மிரட்டியவா் கைது

News image
Updated On :5 ஜனவரி 2026, 7:55 pm

தினமணி செய்திச் சேவை

குரும்பூா் அருகே முதியவரை மிரட்டியதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

குரும்பூா் அருகே சேதுக்குவாய்த்தான் முஸ்லிம் தெருவைச் சோ்ந்த தாஜுதீன் (65), ராஜபதி சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த சத்தியமூா்த்தி (53) ஆகியோரிடையே நிலப் பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்ததாம்.

சத்தியமூா்த்தியும், அவரது உறவினரான பெருங்குளம் அருகே உண்டியலூரைச் சோ்ந்த கோபால் மகன் ரவிக்குமாரும் சனிக்கிழமை தாஜுதீன் வீட்டுக்குச் சென்று தகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்ததுடன், வீட்டின் முன்புறக் கதவை சேதப்படுத்திச் சென்றனராம்.

புகாரின்பேரில், குரும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சத்தியமூா்த்தியைக் கைது செய்தனா்; ரவிக்குமாரைத் தேடிவருகின்றனா்.