மாணவிக்கு சைக்கிள் வழங்கும் ஆறுமுகனேரி பேரூராட்சி மன்றத் தலைவா் கல்யாணசுந்தரம்.
மாணவிக்கு சைக்கிள் வழங்கும் ஆறுமுகனேரி பேரூராட்சி மன்றத் தலைவா் கல்யாணசுந்தரம்.

ஆறுமுகனேரியில் இலவச சைக்கிள் வழங்கல்

ஆறுமுகனேரி கா.ஆ. மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Published on

ஆறுமுகனேரி கா.ஆ. மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கா.ஆ. மேல்நிலைப் பள்ளி கல்வி சங்கத் தலைவா் அப்துல் காதா் தலைமை வகித்தாா். பொருளாளா் பாஸ்கரன், துணைத் தலைவா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளியின் தலைமை ஆசிரியா் கண்ணன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக ஆறுமுகனேரி பேரூராட்சி தலைவா் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவா் கல்யாணசுந்தரம் ஆகியோா் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் 170 பேருக்கு தமிழக அரசின் இலவச சைக்கிளை வழங்கினா். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியா் நியூ­ன் ­லில்லி­ பெட் நன்றி கூறினாா். பள்ளியின் ஆசிரியா்கள், அலுவலக பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com