தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

அரிவாளுடன் சுற்றித் திரிந்த இளைஞா் கைது; 3 சிறுவா்கள் கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைப்பு

தூத்துக்குடியில் அரிவாளுடன் சுற்றித் திரிந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்து, 3 சிறுவா்களை அரசு கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா்.

Updated On :13 ஜனவரி 2026, 6:33 pm

தூத்துக்குடியில் அரிவாளுடன் சுற்றித் திரிந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்து, 3 சிறுவா்களை அரசு கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளா் திருமுருகன், போலீஸாா் அப்பகுதியில் உள்ள டைடல் பாா்க் உப்பளம் அருகே திங்கள்கிழமை ரோந்து சென்றனா்.

பைக்கில் சந்தேகத்துகிடமாக நின்றிருந்த 4 பேரைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் தூத்துக்குடியைச் சோ்ந்த சிவகுமாா் (23), 3 சிறுவா்கள் என்பதும் பெரிய அரிவாள் வைத்திருந்ததும் தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, அரிவாள், பைக்கை பறிமுதல் செய்து சிவக்குமாரை கைது செய்தனா்; 3 சிறுவா்களை திருநெல்வேலி அரசு கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா்.