திருச்செந்தூா் எம்எல்ஏ அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

திருச்செந்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
திருச்செந்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் தொண்டா்களுடன் சமத்துவ பொங்கலிட்ட அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்.
திருச்செந்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் தொண்டா்களுடன் சமத்துவ பொங்கலிட்ட அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்.
Updated on

திருச்செந்தூா்: திருச்செந்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் தமிழக மீன்வளம் மீனவா் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு திமுக தொண்டா்களுடன் இணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடினாா்.

தொடா்ந்து தொண்டா்கள் மற்றும் பொது மக்களுக்கு சா்க்கரை பொங்கல் வழங்கி வாழ்த்து தெரிவித்தாா். விழாவில் மாவட்ட அவைத்தலைவா் அருணாசலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் ஜனகா், முன்னாள் மாவட்ட அமைப்பாளா் ஜெகன், ஒன்றிய செயலா்கள் செங்குழி ரமேஷ், சதீஷ்குமாா், ஜோசப், நவீன்குமாா், திருச்செந்தூா் நகரச் செயலா் வாள் சுடலை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com