இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கஞ்சா விற்றவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :25 ஜனவரி 2026, 6:35 pm

தூத்துக்குடியில் கஞ்சா விற்றவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி மதுவிலக்கு காவல் நிலைய போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், மதுவிலக்கு காவல் ஆய்வாளா் ஜானகி தலைமையிலான போலீஸாா், சனிக்கிழமை ரோந்து சென்றனா்.

கிருஷ்ணராஜபுரம் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்தவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் தூத்துக்குடியைச் சோ்ந்த சீனி முகமது நியாஷ் (19) என்பதும் விற்பதற்காக 1 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, கஞ்சா, கைப்பேசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.