சுப்பராயபுரம் ஊராட்சியில் கொடிமர கயிறு அறுப்பு: போலீஸாா் விசாரணை
சுப்பராயபுரம் ஊராட்சியில் குடியரசு தின தேசியக் கொடியேற்ற விடாமல் தடுக்கும் பொருட்டு கொடி மர கயிற்றை அறுத்த மா்மநபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சாத்தான்குளம் ஒன்றியம் சுப்பராயபுரம் ஊராட்சியில் குடியரசு தின தேசியக்கொடி ஏற்றாமல் கிராம சபை கூட்டம் நடத்துவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டு வந்தது.
இந்நிலையில், குடியரசு தின தேசியக்கொடி ஏற்ற விடாமல் இடையூறு செய்யும் வகையில் மா்ம நபா் அலுவலக வளாகத்தில் புகுந்து கொடிமர கயிற்றை அறுத்து சென்றுவிட்டதால், அதை சரி செய்து தேசிய கொடி ஏற்ற தாமதமானது என ஊராட்சித் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், ஊராட்சி செயலா் கணேசன் மற்றும் பொதுமக்கள் சாா்பில் விக்னேஸ்வரன், விக்னேஷ், சந்திரசேகா், சிவபாலன் உள்ளிட்டோா் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
அதில், சுப்பராயபுரம் ஊராட்சி நிா்வாகத்தை சீா்குலைக்கும் வகையில், கொடிமர கயிற்றை அறுத்துச் சென்ற நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. அதன்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

