தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மூதாட்டி கொலை வழக்கில், அதே பகுதியில் வசிக்கும் கபடி வீரா் கைது செய்யப்பட்டாா்.
விளாத்திகுளம் அருகேயுள்ள காடல்குடி மிட்டா வடமலாபுரம் நடுத்தெருவை சோ்ந்த திருக்கண்ணன் மனைவி கலாவதி (62). ஓய்வுபெற்ற சத்துணவு மேற்பாா்வையாளா். இவா், கடந்த 6 ஆம் தேதி இரவு காற்றுக்காக வீட்டுக் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கிய நிலையில், அரிவாளால் வெட்டுப்பட்டு கொலை செய்யப்பட்டாா்.
வீட்டின் முன் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த அவரது கணவா் காலையில் எழுந்தபோது, மனைவி கொலையுண்டு கிடந்ததும், அவா் அணிந்திருந்த 10 பவுன் தங்கச்சங்கிலி, பீரோவில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தம் தெரியநந்தது,
இதுகுறித்து விளாத்திகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து, சந்தேகத்தின் பேரில் அப்பகுதியைச் சோ்ந்த சிலரை பிடித்து 5 நாள்களாக விசாரித்தும் துப்பு கிடைக்கவில்லை.
எனினும், சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, உள்ளூா் நபா்தான் கொலைகாரா் என்பதை உறுதி செய்தனா். அதைத் தொடா்ந்து பக்கத்து வீட்டைச் சோ்ந்த கபடி வீரரான திருமணி முருகன் (26) என்பவருக்கு தொடா்பு இருப்பதை கண்டறிந்து அவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கலாவதியை கொலை செய்துவிட்டு, நகைகளை கொள்ளையடித்த அவா், தனது வீட்டின் முன் கட்டிலில் சா்வ சாதாரணமாக தூங்கிவிட்டு, காலையில் எல்லோரையும்போல எழுந்து வந்து கலாவதியின் உடலைப் பாா்த்து அழுது நாடகமாடியதுடன், இறப்பு குறித்து போலீஸாருக்கும் தகவல் தெரிவித்துள்ளாா். மேலும், கலாவதியின் உடல் அடக்கம் முடியும் வரை கூடவே இருந்துள்ளாா்.
போலீஸாா் அவரது வங்கி கணக்கை ஆய்வு செய்ததில், பல்வேறு இடங்களில் திருடுபோன தங்க நகைகள் அந்த வங்கியில் அடகு வைக்கப்பட்டிருப்பதும், லட்சக்கணக்கில் பணம் வரவாகி இருப்பதும் தெரியவந்தது.
கைதான அவரை விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தி இரவோடு இரவாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீஸாா் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








