கல்லாமொழி, குலசேகரன்பட்டினம். மணப்பாடு ஆகிய பகுதிகளயில் புதன்கிழமை (ஜூலை 15) மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின் விநியோக செயற்பொறியாளா் அருள் சாரங்க ராயா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூா் கோட்டம் கல்லாமொழி உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை நடைபெறுவதால், அதன் மின்பாதை பகுதிகளான ஆலந்தலை, கல்லாமொழி, கந்தசாமிபுரம், கணேசபுரம், சுனாமி நகா், சூசைநகா், குலசேகரன்பட்டினம், மணப்பாடு, சிறுநாடாா்குடியிருப்பு, நா.முத்தையாபுரம், மறவன்விளை, நாலுமூலைக்கிணறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது எனக் கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





