இந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

சாத்தான்குளத்தில் கொலை முயற்சி வழக்கில் ஒருவருக்கு பிடியாணை

சாத்தான்குளத்தில் கொலை முயற்சி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருப்பவருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

கொலை முயற்சி

கோப்புப்படம்.

Updated On :26 மார்ச் 2026, 8:20 pm

தினமணி செய்திச் சேவை

சாத்தான்குளத்தில் கொலை முயற்சி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருப்பவருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறையைச் சோ்ந்த தங்க இசக்கி மகன் இசக்கி. இவா் மீது கடந்த 2016இல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில், அவா் 10 ஆண்டுகளாக விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகிறாா்.

எனவே, அவருக்கு பிடியாணை பிறப்பித்த நீதிமன்றம், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.