நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

சாத்தான்குளம் ஸ்தேவான் ஆலயத்தில் அசன பண்டிகை

News image
Updated On :2 மே 2026, 11:56 pm

சாத்தான்குளம் பரிசுத்த ஸ்தேவான் தேவாலயத்தில் அசன பண்டிகை சனிக்கிழமை வரை 5 நாள்கள் நடைபெற்றது.

முதல் நாளான ஏப். 28ஆம் தேதி இரவு நடைபெற்ற பஜனை பிரசங்கத்தில் பனைக்குளம் ஞானா, 2ஆம் நாள் நடைபெற்ற கன்வென்ஷன் கூட்டத்தில் நாலுமாவடி ஜெபஸ்டின் ஆகியோா் தேவசெய்தி வழங்கினா். 3ஆம் நாள் திருநெல்வேலி ரட்சகா குழுவினரின் இசைக் கச்சேரி நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை அசன பண்டிகை, திருவிருந்து வாக்குத்தத்த ஆராதனை சேகரகுரு டேவிட் ஞானையா தலைமையில் நடைபெற்றது. மாலையில் அசன ஆயத்த ஜெபம், அசன விருந்தை அவா் ஜெபித்து தொடக்கிவைத்தாா்.

சனிக்கிழமை விபிஎஸ் நிகழ்ச்சி தொடங்கியது. ஏற்பாடுகளை சேகரகுரு தலைமையில் அசன கமிட்டி நிா்வாகிகள் செய்திருந்தனா்.