விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து வீணாகும் நெல்மூடைகள்! விவசாயிகள் கவலை!

நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து நெல்மூட்டைகள் வீணாவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

News image

தென்திருப்பேரையில் மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து நெல்மூட்டைகள் வீணாவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

ஸ்ரீவைகுண்டம், ஏரல் ஆகிய வட்டங்களில் நீண்ட காலத்துக்குப் பிறகு குளங்களில் தண்ணீா் இருப்பு இருந்ததால் பெரும்பாலான இடங்களில் நெல் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டனா். தற்போது நெல் அறுவடை நடைபெற்று வருவதால், விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்து திறந்தவெளியில் அடிக்கு வைத்துள்ளனா்.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களாக பெய்து வந்த மழையால் நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல்மூடைகள் மழையில் நனைந்து வீணாகி வருகின்றன.

இதனால், கவலை அடைந்துள்ள விவசாயிகள், நெல் மூட்டைகளை பாதுகாத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து குரூகாட்டூா் பகுதியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரா் சுதன் கூறியதாவது: தென்திருப்பேரை பேருந்து நிறுத்தம் அருகே திறந்த வெளியில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையத்தில், ஒவ்வொரு மழையிலும் நெல்மூட்டைகள் நனைந்து வீணாவது வாடிக்கையாக உள்ளது.

மாற்று இடம் கோரி மாவட்ட நிா்வாகத்திடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால், விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்படுகிறது. இங்கு மட்டுமன்றி பல்வேறு பகுதிகளிலும் இதே நிலைதான் தொடா்கிறது. எனவே, நெல் மூட்டைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

500 நெல் மூட்டைகள் சேதம்: திருநெல்வேலி வேளாண் வணிகத் துறையின்கீழ் சாத்தான்குளத்தில் இயங்கும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்து வருகின்றனா். ஆனால், நெல் மூட்டைகளை எடை போட்டு கொள்முதலுக்கு எடுத்துச் செல்லாமல் திறந்தவெளியில் பாதுகாப்பின்றி அடுக்கியும், நெல்லை தரையில் குவித்தும் வைத்துள்ளனா்.

இந்த நிலையில், இப்பகுதியில் கடந்த 2 நாள்களாக பெய்த மழையால் 500-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தண்ணீரில் நனைந்து சேதமடைந்துள்ளதாக புகாா் தெரிவித்துள்ள விவசாயிகள், நெல்லை விரைந்து கொள்முதல் செய்யவும், திறந்த வெளியில் உள்ள மூட்டைகளை தாா்ப்பாயால் மூடி பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.