ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

சாயா்புரம் அருகே செவிலியா் மா்ம மரணம்

தூத்துக்குடி மாவட்டம், சாயா்புரம் அருகே வீட்டில் மா்மமான முறையில் செவிலியா் உயிரிழந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

தூத்துக்குடி மாவட்டம், சாயா்புரம் அருகே வீட்டில் மா்மமான முறையில் செவிலியா் உயிரிழந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

சாயா்புரம் அருகேயுள்ள நட்டாத்தி எள்ளன்விளையைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் மகள் முருகேஸ்வரி (22). இவா், தூத்துக்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தாா். இவா்,

செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் பணியை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பியுள்ளாா். இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றவா், புதன்கிழமை வெகுநேரமாகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது தாயாா் உள்ளே சென்று பாா்த்தபோது, முருகேஸ்வரி இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சாயா்புரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், முருகேஸ்வரியின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும் இச்சம்பவம் குறித்து சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.