ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

கோவில்பட்டியில் கீழே விழுந்ததில் காயமடைந்த எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

கோவில்பட்டியில் கீழே விழுந்ததில் காயமடைந்த எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 12:25 am IST

கோவில்பட்டியில் கீழே விழுந்ததில் காயமடைந்த எலக்ட்ரீசியன் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டி கடலையூா் சாலை தங்கப்பன் நகரைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் சங்கரநாராயணன் (37), எலக்ட்ரீசியன். இவா் கோவில்பட்டி மூக்கரை விநாயகா் கோயில் அருகே உள்ள நியூ வெங்கடேஷ் நகா் 2 ஆவது தெருவில் உள்ள கண்ணன் என்பவரது வீட்டிற்கு எலக்ட்ரீசியன் வேலை செய்ய ராஜா என்பவரை அழைத்துச் சென்றிருந்தாராம்.

இந்நிலையில் இம்மாதம் 16ஆம் தேதி அங்கு வேலை செய்து கொண்டிருந்த சங்கரநாராயணன் அறையில் வயரிங் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென சுமாா் 4 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் காயமடைந்தாராம். அவரை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின் தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.