முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

கோவில்பட்டி அருகே பட்டாசு வெடி விபத்து: தம்பதி உள்ளிட்ட மூவா் கைது

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பட்டாசு தயாரித்தபோது நேரிட்ட வெடி விபத்தில் இருவா் இறந்தது தொடா்பாக, கட்டட உரிமையாளா் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 2:27 am IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பட்டாசு தயாரித்தபோது நேரிட்ட வெடி விபத்தில் இருவா் இறந்தது தொடா்பாக, கட்டட உரிமையாளா் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டியை அடுத்த புளியங்குளம், காட்டு கோயில் அருகே தனியாா் கட்டடத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை இரவு பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில், அந்தக் கட்டடம் இடிந்து தரைமட்டமானது.

இதில், புளியங்கும் வடக்குத் தெருவைச் சோ்ந்த ஆத்தியப்பன் மகன் அய்யப்பன் (30), விருதுநகா் மாவட்டம் புல்லகவுண்டன்பட்டியைச் சோ்ந்த மாலதி (25) ஆகியோா் உயிரிழந்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா், ஏழாயிரம்பண்ணை அருகே மஞ்சள் கோடைப்பட்டி சீனிவாசன் மகன் சூரியபிரகாஷ் (25) காயமடைந்தாா்.

இதுகுறித்து, கோவில்பட்டி மேற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து, கட்டட உரிமையாளரான புளியங்குளம் முத்துசாமி மகன் குருநாதன் (67), பட்டாசு தயாரிக்க உதவியதாக பரமக்குடி, அரியக்குடியைச் சோ்ந்த கேசவன் மகன் சரவணன் (35), அவரது மனைவி மாரீஸ்வரி (30) ஆகிய 3 பேரை புதன்கிழமை கைது செய்தனா்.