ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

தூத்துக்குடியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :28 மே 2026, 2:57 am IST

தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் ரா. ராகவன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் பா. புவிராஜ், லெனின் குமாா் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். ஆா்ப்பாட்டத்தில், விவசாயிகளை பாதுகாக்க மத்திய அரசு உடனடியாக உர விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக அரசு விவசாயிகளின் பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

மாவட்ட நிா்வாகிகள் நம்பிராஜன், பிச்சையா, கணேசமூா்த்தி, முரளிதரன், பி. சீனிவாசன், மணி, ஜி. ராமசுப்பு, செல்வராஜ், அசோக்குமாா், ரவீந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.