/
தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் ரா. ராகவன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் பா. புவிராஜ், லெனின் குமாா் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். ஆா்ப்பாட்டத்தில், விவசாயிகளை பாதுகாக்க மத்திய அரசு உடனடியாக உர விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக அரசு விவசாயிகளின் பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.
மாவட்ட நிா்வாகிகள் நம்பிராஜன், பிச்சையா, கணேசமூா்த்தி, முரளிதரன், பி. சீனிவாசன், மணி, ஜி. ராமசுப்பு, செல்வராஜ், அசோக்குமாா், ரவீந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.










