அரியலூர், ஏப். 2: அரியலூர் அருகேயுள்ள வாரணவாசி கிராமத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட அக் கட்சியின் மேலிட துணைப் பொறுப்பாளர் க. விடுதலை நம்பி, புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை கட்சியின் வாரணவாசி நிர்வாகிகள் க. பெரியசாமி, எம். எழில்நிலவன் ஆகியோரிடம் வழங்கினார் (படம்).
கட்சிப் பொறுப்பாளர்கள் ஆதி. மைந்தன், ஓவியர் தி. பச்சமுத்து, பெ. அன்பானந்தம், செ.வே. மாறன், ப. காமராஜ், அ. கண்ணன், கை. சேகர், வாரணவாசி கிளை நிர்வாகிகள் கு. சுந்தரவள்ளி, வ. சந்தானபாரதி, ம. பழனிச்சாமி, எஸ். கருப்பையா, கே. ராஜசேகர், ஆர். அருண்குமார், எஸ். விக்னேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.