திருச்சி, ஜூலை 30: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில், ஜூலை 27-ம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, அரங்கநாதசுவாமி கோவில் அறங்காவல் குழு உறுப்பினர்களாக அசோக் லைலேண்ட் நிறுவன செயல் துணைத் தலைவர் சேஷஷாயி, தொழிலதிபர் எஸ்.பி. ரங்காச்சாரி, மருத்துவர் கே.என். சீனிவாசன், பி. கஸ்தூரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், சுழல்முறை அறங்காவலராக ஆர். திருவேங்கட பராசர பட்டர் நியமிக்கப்பட்டுள்ளார். சுழல்முறை அறங்காவலர்கள் ஆண்டுதோறும் தமிழ் மாதமான சித்திரை 1 முதல் பங்குனி 30-ம் தேதி வரை பொறுப்பில் இருப்பர். அறங்காவலர் குழு உறுப்பினர்களில் ஒருவர் தலைவராக விரைவில் தேர்வு செய்யப்படவுள்ளார் என அறநிலையத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.