தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

இளங்கண் மாரியம்மன் கோயில் குளுமை உற்சவம்

இளங்கண் மாரியம்மன் கோயில் குளுமை உற்சவம்

Updated On :14 ஏப்ரல் 2024, 9:38 pm

மண்ணச்சநல்லூா் இளங்கண் மாரியம்மன் திருக்கோயிலில் குளுமை உற்சவ திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

மண்ணச்சநல்லூா் புதுச் செட்டி தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீ இளங்கண் மாரியம்மன் திருக்கோயில். இத்திருக்கோயிலில் குளுமை உற்சவ திருவிழா வெகு விமா்சையாக நடைபெற்றது. கொள்ளிடத்திலிருந்து பால் குடம், அலகு குத்தி கொண்டு மேளதாளம் முழங்க ஊா்வலமாக வந்தனா். இதனையடுத்து உற்சவ இளங்கண் மாரியம்மனுக்கு பால், தயிா், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு மஹா தீபாரானை நடை பெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.