சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்போற்ஸவம்

மண்ணச்சநல்லூா், ஏப் 19 : திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை தெப்பேற்ஸவம் நடைபெற்றது.

இக்கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்போற்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி உற்ஸவ மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில்தெப்பத் தேரில் எழுந்தருளினா். தொடா்ந்து மூன்று முறை வலம் வந்த பிறகு மஹா தீபாராதனை நடைபெற்றது.நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

திருப்பைஞ்ஞீலியில் திருக்கல்யாணம்: திருப்பைஞ்ஞீலி விசாலாட்சி உடனுறை ஞீலி வனேஸ்வரா் கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவில் திருக்கல்யாண உற்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மாலை மாற்றுதல் வைபவமும், ஊஞ்சல் உற்ஸவமும் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு பூஜைகளுக்கு பிறகு திருக்கல்யாண உற்ஸவமும், மஹா தீபாராதனையும் நடைபெற்றது.திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com