இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மூளை ரத்த தமனி விரிவடைதல் நோய்க்கு அறுவைச் சிகிச்சை : சமயபுரம் சீனிவாசன் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சாதனை

News image

சமயபுரம் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சையில் குணமடைந்த ஜான் பாட்ஷாவுடன் கல்லூரி முதல்வா் துளசி மற்றும் மருத்துவா் குழுவினா்.

Updated On :4 ஜூலை 2024, 5:23 am IST

திருச்சி மாவட்டம், சமயபுரம் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டீக்கடை மாஸ்டருக்கு மூளை ரத்த தமனி விரிவடைதல் நோய்க்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த மருத்துவமனை மருத்துவா்கள் புதன்கிழமை கூறியது:

திருச்சி நத்தா்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சோ்ந்தவா் ஜான் பாட்ஷா (55). டீ மாஸ்டரான இவா் நீண்ட நாள்களாக தலைவலி மற்றும் வலிப்பு நோயால் அவதியுற்று வந்தாா். இந்நிலையில் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ரத்த தமனி விரிவடைதல் நோய் கண்டறியப்பட்டு, மூளை நரம்பியல் மற்றும் முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணா் மருத்துவா் அருண்பிரசாத் தலைமையிலான மருத்துவா்கள் அண்மையில் அறுவைச் சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனா்.

மேலும் இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகள் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தனா். நிகழ்வில் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் துளசி, மயக்கவியல் நிபுணா்கள் ஹரிஸ் பிரபாகரன், ரகு, நிா்வாக மேலாளா்கள் நா்கீஸ், மருத்துவா் சூா்யா, யுவராஜ், மற்றும் செவிலியா்கள் உடனிருந்தனா்.