கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 14 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

படம் இணைத்து அனுப்பப்படுகிறது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 14 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

News image
Updated On :9 மே 2024, 8:57 pm

Din

சமையல் எரிவாயு உருளை ரெகுலேட்டரில் கடத்தி வரப்பட்ட தங்கம்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் புதன்கிழமை ரூ. 14 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

மலேசியாவிலிருந்து ஏா் ஏசியா விமானம் புதன்கிழமை இரவு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த, பயணிகளையும் அவா்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவினா் சோதனை மேற்கொண்டனா்.

இதில் பயணி ஒருவா் கொண்டு வந்த, சமையல் எரிவாயு உருளை ரெகுலேட்டரில் ரூ. 14.05 லட்சம் மதிப்பிலான 198 கிராம் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்தப் பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.