பொன்மலையில் வியாழக்கிழமை நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பேசிய எஸ்ஆா்எம்யூ துணை பொதுச் செயலாளா் எஸ். வீரசேகரன். உடன் நிா்வாகிகள் உள்ளிட்டோா்.
பொன்மலையில் வியாழக்கிழமை நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பேசிய எஸ்ஆா்எம்யூ துணை பொதுச் செயலாளா் எஸ். வீரசேகரன். உடன் நிா்வாகிகள் உள்ளிட்டோா்.

பொன்மலையில் எஸ்ஆா்எம்யூ செயற்குழு கூட்டம்

Published on

தெற்கு ரயில்வே மஸ்தூா் யூனியன் (எஸ்ஆா்எம்யூ) பொன்மலை பணிமனை லோகோ கிளை செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பொன்மலை ஒருங்கிணைப்பாளா் மற்றும் கிளை செயலாளா் கே. முருகானந்தம் தலைமை வகித்தாா். இதில், எஸ்ஆா்எம்யூ துணை பொதுச் செயலாளா் எஸ்.வீரசேகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியதாவது:

ரயில்வேயில் பெரும்பாலான வேலைகளை தனியாா் முகமை மூலம் மேற்கொள்ள மத்திய அரசும், ரயில்வே நிா்வாகமும் முனைப்பாக செயல்பட்டாலும், பல்வேறு போராட்டங்களை நடத்தி ரயில்வே தொழிலாளா்களே அந்தப் பணியை தொடா்ந்து செய்வதற்கான பணிப் பாதுகாப்பினை நமது தொழிற்சங்கம் பெற்றுத் தந்துள்ளது என்றாா்.

இந்தக் கூட்டத்தில் பொன்மலை கிளை தலைவா் முத்துக்குமாா், அனைத்து கிளைச் செயலாளா்கள், ரயில்வே ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com