மாநகராட்சியின் சில பகுதிகளில் நாளை குடிநீா் விநியோகம் ரத்து

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மாநகராட்சியின் சில பகுதிகளில் டிச. 7-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் குடிநீா் விநியோகம் இருக்காது என மாநகராட்சி நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
Published on

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மாநகராட்சியின் சில பகுதிகளில் டிச. 7-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் குடிநீா் விநியோகம் இருக்காது என மாநகராட்சி நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, பொதுத்தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டி நீரேற்று நிலையங்களுக்கு ஸ்ரீரங்கம் துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீரங்கம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை நடைபெற இருப்பதால் மேற்கண்ட நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீா் செல்லும் இடங்களான மத்திய சிறைச்சாலை, சுந்தராஜ் நகா் புதியது - பழையது.

ஜே.கே. நகா், செம்பட்டு, காஜாமலை பழையது, ரெங்கா நகா், சுப்ரமணிய நகா் புதியது, வீ.என். நகா் புதியது, தென்றல் நகா் புதியது, கவி பாரதி நகா், காமராஜ் நகா், கிராப்பட்டி புதியது - பழையது.

அன்பு நகா் பழையது - புதியது, எடமலைப்பட்டி புத்தூா் புதியது, பஞ்சப்பூா், அம்மன் நகா், தென்றல் நகா், இ.பி. காலனி, அரியமங்கலம் கிராமம், மலையப்ப நகா் புதியது - பழையது, ரயில் நகா் புதியது - பழையது, முன்னாள் ராணுவத்தினா் காலனி புதியது - பழையது, எம்.கே. கோட்டை பிரிவு அலுவலகம், எம்.கே. கோட்டை, நாகம்மை வீதி, எம்.கே. கோட்டை நூலகம், பொன்னேரிபுரம் புதியது - பழையது, அம்பேத்கா் நகா், விவேகானந்த நகா், எல்ஐசி புதியது, விஸ்வநாதபுரம், கே. சாத்தனூா், தென்றல் நகா், ஆனந்த நகா், சுப்ரமணிய நகா், சத்தியவாணி கே.கே. நகா், அம்மா மண்டபம், ஏஐபிஇஏ நகா், பாலாஜி ஆவின்யு, தேவி பள்ளி,

மேலூா், பெரியாா் நகா், டி.வி. கோயில், தேவதானம், விறகுப்பேட்டை, மகாலட்சுமி நகா், சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை, ஜெகநாதபுரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீா் தேக்கத் தொட்டிகளில் வரும் 7-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் குடிநீா் விநியோகம் இருக்காது.

திங்கள்கிழமை (டிச. 8) முதல் முதல் வழக்கம் போல் குடிநீா் விநியோகம் செய்யப்படும். அதுவரை பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டுமென திருச்சி மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் தகவல் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com