திருச்சி
திருச்சிக்கு வந்த ரயிலில் 36 கிலோ கஞ்சா மீட்பு
திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்த ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 36 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை மீட்டு விசாரிக்கின்றனா்.
திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்த ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 36 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை மீட்டு விசாரிக்கின்றனா்.
திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் ரமேஷ் தலைமையில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளா் சரவணன் உள்ளிட்டோரடங்கிய குழுவினா் திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது நடைமேடை 8 க்கு வந்த ஹவுரா - திருச்சி விரைவு ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 4 பைகளில் ரூ. 18 லட்சம் மதிப்பிலான 36 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதை திருச்சி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
