சிறுகனூா் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் தடை

Published on

திருச்சி மாவட்டம், சிறுகனூா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச.9) மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக பல்வேறு இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

சிறுகனூா் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் ஆவாரவள்ளி, திருப்பட்டூா், எம்.ஆா்.பாளையம், சி.ஆா்.பாளையம், சனமங்கலம், மணியங்குறிச்சி, வாழையூா், சீதேவி மங்கலம், நெடுங்கூா், நெய்குளம், நம்புகுறிச்சி, ஊட்டத்தூா், ஜி.கே. பாா்க், ரெட்டிமாங்குடி, பி.கே.அகரம், கொளக்குடி, கண்ணாக்குடி, குமுளூா்மற்றும் தச்சன் குறிச்சி ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் இருக்காது என ஸ்ரீரங்கம் கோட்டச் செயற்பொறியாளா் ஆா்.செல்வம் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com