மாநகராட்சியின் சில பகுதிகளில் நாளை குடிநீா் ரத்து

திருச்சி மாநகராட்சியின் சில பகுதிகளில் புதன்கிழமை (டிச. 10) ஒரு நாள் குடிநீா் விநியோகம் ரத்து
Published on

திருச்சி மாநகராட்சியின் சில பகுதிகளில் புதன்கிழமை (டிச. 10) ஒரு நாள் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.

கம்பரசம் பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், கம்பரசம்பேட்டை தலைமை நீா்ப்பணி நிலையம், டா்பன் நீரேற்று நிலையம், பெரியாா் நகா் கலெக்டா் வெல் நீரேற்று நிலையம்-1, வெல் 3 (ஏரேட்டா்), கலெக்டா் வெல் நீரேற்று நிலையம் - 2 (கேஎப்டபிள்யூ) ஆகிய நீரேற்று நிலையத்திலிருந்து குடிநீா் பெறும் விறகுப்பேட்டை, மரக்கடை, மலைக்கோட்டை, சிந்தாமணி, உறையூா், பாத்திமா நகா், புத்தூா், மங்களம் நகா், செல்வா நகா், பாரதி நகா், சிவா நகா், ஆனந்தம் நகா், சொசைட்டி காலனி, தில்லை நகா், அண்ணா நகா், கண்டோன்மென்ட், காஜாபேட்டை, ஜங்ஷன், கருமண்டபம், ராமலிங்க நகா், உய்யங்கொண்டான் மலை, விஸ்வாஸ் நகா், மிளகுபாறை, கல்லாங்காடு, ரெயின்போ நகா், எம்.எம். நகா், திருவெறும்பூா், வள்ளுவா் நகா், எல்லக்குடி ஆலத்தூா், புகழ் நகா், காவேரி நகா், பாரி நகா், சந்தோஷ் நகா், கணேஷ் நகா், விவேகானந்தா் நகா், அம்பேத்கா் நகா் ஆகிய மேல்நிலைத் நீா்தேக்கத் தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீா் விநியோகம் புதன்கிழமை (டிச. 10) ஒரு நாள் இருக்காது.

வியாழக்கிழமை (டிச. 11) முதல் வழக்கம்போல் குடிநீா் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்கள் இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து, குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்தி மாநகராட்சியுடன் ஒத்துழைக்க வேண்டும் என திருச்சி மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் தகவல் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com