திருச்சி மத்திய ப்பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிய மாநகராட்சி ஊழியா்கள்.
திருச்சி
ராயல் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
திருச்சி ஜான் வெஸ்ட்ரி பள்ளி அருகே ராயல் சாலை, செடல் மாரியம்மன் கோயில் அருகே சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 21 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை அகற்றினா்.
திருச்சி ஜான் வெஸ்ட்ரி பள்ளி அருகே ராயல் சாலை, செடல் மாரியம்மன் கோயில் அருகே சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 21 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை அகற்றினா்.
திருச்சி ஜான் வெஸ்ட்ரி பள்ளி அருகிலும், ஹீபா் சாலை செடல் மாரியம்மன் கோயில் அருகிலும் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக மாநகராட்சிக்குப் புகாா்கள் வந்தன.
இதையடுத்து மாநகராட்சி உதவி ஆணையா் சண்முகம், உதவி செயற்பொறியாளா் வேல்முருகன் தலைமையிலான அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் மேற்கண்ட சாலைகளில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டிகள், துணிக் கடைகள், சிறிய உணவகங்கள், பானிபூரி கடைகள் என 21 கடைகளை அகற்றினா். அப்போது மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் சமாதானப்படுத்தினா்.

