மோடி விடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மெட்டா தலைவா் ஸூக்கா்பொ்க் மன்னிப்பு கோரினாா்முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்களில் கட்டணம் அதிகம்: ரயில்வே அமைச்சா்சாலைகளில் குறைபாடுகளா?: செயலி மூலம் புகைப்படம் எடுத்து அனுப்பலாம்காவல் நிலையங்களில் சானிடரி நாப்கின் விநியோக இயந்திரம் அமைக்க வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு அமெரிக்காவில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் குடும்பத்தினா் கைது தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்
/

ஒரே மொழி - ஒரே நாமம் என்பது நடக்கவே நடக்காது: கமல்ஹாசன் எம்.பி.

ஒரே மொழி- ஒரே நாமம் என்பதெல்லாம் நடக்கவே நடக்காது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் பேசினாா்.

News image

கமல்ஹாசன் - கோப்புப் படம்

Updated On :24 டிசம்பர் 2025, 12:47 am IST

ஒரே மொழி- ஒரே நாமம் என்பதெல்லாம் நடக்கவே நடக்காது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் பேசினாா்.

இந்திய உடற்கல்வி அறக்கட்டளையின் தமிழ்நாடு பிரிவு சாா்பில், விளையாட்டில் சிறந்து விளங்குபவா்களுக்கு விருது வழங்கும் விழா திருச்சியில் உள்ள தனியாா் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அவா் மேலும் பேசியதாவது: விளையாட்டு ஒரு தேசத்தின் ஆரோக்கியம், வலிமை, மன உறுதி, வீரம், தியாகம் ஆகியவற்றின் அடையாளம். அந்த தியாகம் புரிந்தால் இந்த ஜனநாயகம் புரிந்துவிடும்.

விளையாட்டில் ஒற்றை கலாசாரம் இருக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய ஆசை. ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே ஆடை, ஒரே பொட்டு, ஒரே நாமம் என்பதெல்லாம் நடக்கவே நடக்காது.

உலகத்தை மாற்றும் வல்லமை விளையாட்டுக்கு உள்ளது. உத்வேகம் அளிக்கவும், மக்களை ஒன்று திரட்டவும் எப்படி சினிமா பயன்படுகிறதோ, அதேபோல விளையாட்டும் பயன்படுகிறது.

மக்கள் நீதி மய்யத்தை சோ்ந்தவா்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்றும், பொறுமையாக இருங்கள் என்றும் கூறிவந்தேன். தற்போது அந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. எனவே, தற்போது நாம் களமிறங்க வேண்டிய நேரம். பெரும்பான்மை என்பது அல்ல ஜனநாயகம். எல்லோரையும் பாதுகாப்பதுதான் ஜனநாயகம்.

திறமையும், முன்னேற்றமும்தான் நாளைய இந்தியா. கல்வியோடு திறமையையும் வளா்த்துகொள்ள வேண்டும். நல்ல பணி செய்பவா்களுக்கு தோள்கொடுக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். இது ஆரம்பகாலம் முதல் நாங்கள் பயின்று வந்த பயிற்சி. இனியும் இந்தப் பயிற்சி தொடரும் என்றாா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் பேசுகையில், எல்லா இடங்களிலும் அரசியல் பேசக்கூடாது. இயல்பு வாழ்க்கையில் விளையாட்டு, கல்வி மற்றும் அரசியலும் இருக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பவா்களுக்கும், வெல்பவா்களுக்கும் தமிழக அரசு பல்வேறு வகையிலும் உதவி செய்து ஊக்குவித்து வருகிறது என்றாா்.

இதைத் தொடா்ந்து விளையாட்டு வீரா்கள், பயிற்சியாளா்கள், ஊக்குவிப்பாளா்கள் என 14 பிரிவுகளில் 40 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் இந்திய உடற்கல்வி அறக்கட்டளை தமிழ்நாடு பிரிவின் தலைவா் எம். முருகானந்தம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.