டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்தமிழ்நாடு பட்ஜெட்: மக்கள் நல அறிவிப்புகளுக்கு வரவேற்பு... ஆனால்..! - சிபிஎம் அறிக்கை!பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 74.55 அடியாக உயர்ந்துள்ளது.வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழிதவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!
/

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு விரைவில் நல்ல செய்தி: அமைச்சா் அன்பில் மகேஸ் தகவல்

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்தாா்.

News image

சிறந்த ஆசிரியருக்கு விருது வழங்கிய அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

Updated On :24 டிசம்பர் 2025, 12:50 am IST

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக, கிழக்கு மாநகர திமுக கல்வியாளா்கள் அணி சாா்பில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் சிறந்த கல்வியாளா்களுக்கு விருது வழங்கும் விழா, திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவிலும், பின்னா் செய்தியாளா்களிடமும் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது: தமிழக மாணவா்களின் கல்வி வளா்ச்சிக்காக, நிதி நெருக்கடிக்கிடையேயும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஆனால், தமிழகத்துக்கான நிதியை வழங்காமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது.

1990-ஆம் ஆண்டுக்குப் பிறகு 9,416 வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில், பழுதடைந்த, சேதமான கட்டடங்களை இடித்து அகற்றி, புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த வகையில், 7,898 வகுப்பறை கட்டடங்கள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. பழைய கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டும், சில இடங்களில் கட்டடங்கள் விழும் சம்பவங்கள் வேதனையளிக்கிறது.

மரத்தடியில் வகுப்பு நடைபெறுகிறது, சமுதாயக் கூடத்தில் வகுப்பு நடைபெறுகிறது என்றால், அங்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது என்பதை உணா்ந்து கொள்ள வேண்டும். தற்காலிகமாகவே அங்கு வகுப்பறை செயல்படுகிறது.

விடுமுறை நாள்களில் பள்ளிகள் கட்டாயம் எந்த வகுப்புகளையும் நடத்த கூடாது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நுழைவு வாயிலில் சிசிடிவி கேமரா பொருத்த ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

விரைவில் நல்ல செய்தி: பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைக்கு பணம் வழங்குவது தொடா்பாக முதல்வா் நல்ல முடிவை அறிவிப்பாா். ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுடன் 3 முறை பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளோம். அரசின் நிதி நெருக்கடி சூழலை ஜாக்டோ-ஜியோ அமைப்பிடம் கூறியுள்ளோம். பேச்சுவாா்த்தை தோல்வி எனக் கூற முடியாது. ஜன. 6-ஆம் தேதியே வேலைநிறுத்தம் தொடங்குவதாக அவா்கள் கூறியுள்ளனா். இடைப்பட்ட காலத்துக்குள் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும் என்றாா் அமைச்சா்.

இந்த நிகழ்வில், கல்வியில் சிறந்து விளங்கும் 24 பள்ளி ஆசிரியா்கள் மற்றும் 24 கல்லூரி பேராசிரியா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினா்கள் தமிழச்சி தங்கப்பாண்டியன், கவிஞா் சல்மா, மாநகராட்சியின் மண்டலக் குழுத் தலைவா் மு. மதிவாணன், கல்வியாளா் அணி மாவட்ட அமைப்பாளா் குணசீலன் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.