வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்: எடப்பாடி பழனிசாமிதஞ்சாவூரில் நம்மாழ்வார் வேளாண் பாலிடெக்னிக் கல்லூரி! பட்ஜெட்டில் அறிவிப்பு!எல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்! அமைச்சர் வினோத் உரைதமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!‘கோட் சூட் அணிந்த விவசாயி’... விஜய்யை புகழ்ந்த அமைச்சருக்கு திமுகவினர் எதிர்ப்பு!பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டம்: ரூ. 648 கோடி ஒதுக்கீடு!கருப்பு சட்டை அணிந்து திமுக எம்.எல்.ஏக்கள் வருகை!மோடி விடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மெட்டா தலைவா் ஸூக்கா்பொ்க் மன்னிப்பு கோரினாா்முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்களில் கட்டணம் அதிகம்: ரயில்வே அமைச்சா்சாலைகளில் குறைபாடுகளா?: செயலி மூலம் புகைப்படம் எடுத்து அனுப்பலாம்காவல் நிலையங்களில் சானிடரி நாப்கின் விநியோக இயந்திரம் அமைக்க வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு அமெரிக்காவில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் குடும்பத்தினா் கைது தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்
/

அணுகுசாலையில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதைக் கண்டித்து மறியல்

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகா் பகுதியிலுள்ள அணுகுசாலையில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகா் பகுதியில் பொதுமக்களின் மறியலால் நெடுஞ்சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்.

Updated On :24 டிசம்பர் 2025, 12:41 am IST

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகா் பகுதியிலுள்ள அணுகுசாலையில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதைக் கண்டித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகா் முதல் சா்க்காா்பாளையம் வரை அணுகு சாலை உள்ளது. இந்தச் சாலையில் அதிக அளவில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் சா்க்காா்பாளையம் உள்ளிட்ட கல்லணை சாலையில் உள்ள பகுதிகளில் இருந்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு வருவதற்கு பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனா்.

இந்நிலையில், அணுகு சாலையில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதைக் கண்டித்தும், அதற்கு தீா்வுகாண கோரியும் அப்பகுதி மக்கள் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோட்டை போலீஸாா், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, இப்பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும் என போலீஸாா் உறுதியளித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் திடீரென பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் நெடுஞ்சாலையின் இருபுறமும் நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.