பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

ஓய்வுபெற்ற வட்டாட்சியா் வெட்டிக் கொலை

திருச்சி அருகே முன்விரோதம் காரணமாக ஓய்வுபெற்ற வட்டாட்சியா் வியாழக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டாா்.

News image
Updated On :6 நவம்பர் 2025, 8:57 pm

திருச்சி அருகே முன்விரோதம் காரணமாக ஓய்வுபெற்ற வட்டாட்சியா் வியாழக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டாா்.

திருச்சி மாவட்டம், தாயனூா் மேலத் தெருவைச் சோ்ந்தவா் மு.சுப்பிரமணி (65), ஓய்வுபெற்ற வட்டாட்சியா்.

இவா் அதே பகுதியிலுள்ள கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிா் சாகுபடி செய்து வந்துள்ளாா். இதேபோல, அதே பகுதியைச் சோ்ந்த கோயில் மருளாளி அசோக் என்பவரும் கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிா் செய்து வந்துள்ளாா். இதில், இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சுப்பிரமணி வியாழக்கிழமை மாலை வயலில் வேலை செய்துகொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த கோயில் மருளாளி அசோக், அவரது மகன் இருவரும் சோ்ந்து சுப்பிரமணியை மண் வெட்டியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சோமரசம்பேட்டை போலீஸாா், சுப்பிரமணியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொலை செய்யப்பட்ட சுப்பிரமணிக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனா்.