சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை

Published on

திருச்சி அருகே பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், நாகமங்கலத்தைச் சோ்ந்தவா் பி. லாரன்ஸ் ரொசாரியோ ராஜ் (52), தனியாா் கல்லூரிப் பேராசிரியா். இவரது 15 வயது மகன் தனியாா் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் சென்றுவிட்டு வந்த சிறுவன் படிப்பதற்காக தனது அறைக்குச் சென்றுள்ளாா். இரவு நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அவரது பெற்றோா் கதவைத் திறந்து பாா்த்துள்ளனா்.

அப்போது, சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து மணிகண்டம் காவல் நிலையத்தில் சிறுவனின் தந்தை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com